மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை 11, 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம்...

by Nishanth, Jan 18, 2021, 12:51 PM IST

11 மற்றும் 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 71 வயதான முதியவரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ளது வெள்ளறடை கிராமம். இது கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (71). இவரது மகன் ராஜ் (42). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ராஜுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரது வீட்டுக்கு அருகே ராஜின் மனைவியின் ஒரு உறவினர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தந்தையும், மகனும் சேர்ந்து அந்த 2 சிறுமிகளையும் மிரட்டி கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இரண்டு சிறுமிகளின் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதைப் பார்த்த அந்த சிறுமிகளின் பெற்றோர் விவரத்தைக் கேட்டபோது, பயத்தில் நடந்த சம்பவம் குறித்து எதுவும் அவர்கள் கூறவில்லை. ஆனாலும் இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரது பிறப்பு உறுப்பில் காயங்கள் இருப்பதை பார்த்த டாக்டர் அதுகுறித்து கேட்ட போது தான் அந்த சிறுமிகள் விவரத்தை கூறினர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தது பாலராஜ் மற்றும் அவரது மகன் ராஜ் என தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

You'r reading மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை 11, 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம்... Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை