சிறுத்தையைக் கூட விட்டுவைக்காத கும்பல் பொறி வைத்து பிடித்து கொன்று சாப்பிட்ட 5 பேர் கைது

சிறுத்தையை பொறிவைத்து பிடித்து அதைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ளது மாங்குளம் மலை கிராமம். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். எனவே அடிக்கடி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி உள்பட வன விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். இவ்வாறு ஊருக்குள் வரும் அரிய வன விலங்குகளை அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் ரகசியமாக வேட்டையாடி வந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் ஒரு சிறுத்தையை பொறிவைத்து பிடித்து கொன்றதாக மாங்குளம் வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாங்குளம் வனச்சரக அதிகாரி உதயசூரியன் என்பவரின் தலைமையில் வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அங்குள்ள முனிப்பாறை என்ற பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் சிறுத்தையை பிடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் முனிப்பாறை பகுதியைச் சேர்ந்த வினோத், குரியாக்கோஸ், பினு, சாலிம் குஞ்சப்பன் மற்றும் வின்சன்ட் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை எப்படி பொறிவைத்துப் பிடித்து கொன்றனர் என தெரியவந்தது. இக் கும்பலை சேர்ந்த வினோத்துக்கு அப்பகுதியில் சொந்தமாக ஒரு விவசாய நிலம் உள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவது உண்டு. இதையடுத்து அந்த பகுதியில் இக்கும்பல் வன விலங்குகளை பிடிப்பதற்காக ஒரு பொறியை வைத்துள்ளனர்.

அந்தப் பொறியில் கடந்த சில தினங்களுக்கு முன் 6 வயதான ஒரு சிறுத்தை சிக்கியது. இதையடுத்து அந்த சிறுத்தையை அடித்துக் கொன்ற 5 பேரும் பின்னர் அதை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் புலியின் நகம், தோல் மற்றும் பல் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக தயாராக வைத்திருந்தனர். இது தொடர்பாக பலரிடம் அவர்கள் விலை பேசியும் வந்தனர். ஆனால் அதற்குள் வனத்துறையினரிடம் இந்த 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இதற்கு முன்பும் காட்டுப்பன்றிகள் உட்பட ஏராளமான வன விலங்குகளை வேட்டையாடி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வனத்துறையினர் புலியின் தோல், நகம் மற்றும் பல் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து 5 பேரும் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுத்தைக்கு 50 கிலோ எடை இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :