ஒரே இரவில் நாசமான குடும்பம்.. மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்..!

by Logeswari, Feb 4, 2021, 20:02 PM IST

மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஒரு கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கம்பெனியில் உள்ள வேலைகளை முடித்து விட்டு தினமும் வீட்டிற்கு வேல்முருகன் தாமதமாக தான் சென்றுள்ளார். இந்த நேரத்தில் தான் தனலட்சுமிக்கும் அதே பகுதியில் உள்ள ரமேஷ்க்கும் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் படுக்கை அறை வரை சென்றுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று கணவன் வழக்கம் போல் தாமதமாக தான் வருவார் என்று நினைத்து ரமேஷுடன் உடல் உறவு வைத்துள்ளார். ஆனால் வேல்முருகன் அன்று வழக்கத்தை விட சீக்கிரமாக வந்து விட்டார். வேல்முருகன் பல முறை வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை. ஒரு 10 நிமிடம் கழித்து தனலட்சுமி கதவை திறந்துள்ளார். மிகவும் களைப்புடன் வந்த வேல்முருகன் நேராக படுக்கை அறைக்கு சென்று உடைகளை மாற்றியுள்ளார். அப்பொழுது பேண்ட்டை கழட்டும் பொழுது கீழே குனிந்தால் கட்டிலுக்கு கீழே ரமேஷ் ஒளிந்து இருந்துள்ளார். இதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்த வேல் கோவத்தில் இரண்டு போரையும் சரமாக தாக்கியுள்ளார். ரமேஷ் தப்பித்தால் போதும் என்று சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

நள்ளிரவில் மனைவியின் மேல் புகார் அளிக்க பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு விடிந்தவுடன் வந்து புகார் கொடுங்கள் என்று வேல் முருகனை வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டனர். வீட்டிற்கு வந்த வேல்,மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து மகளின் கள்ளக்காதலை பற்றி தெரிவித்துள்ளார். தனலட்சுமியின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனம் அடைந்த தனலட்சுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தை அறிந்து வந்த போலீஸ் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீஸ் இந்த சம்பவத்தை பற்றி விசாரித்து வருகின்றனர்.

You'r reading ஒரே இரவில் நாசமான குடும்பம்.. மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்..! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை