மனைவி மீது சந்தேகம்: கற்பனை செய்ய முடியாத கொடுமையை செய்த கணவன்
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பனை செய்து பார்க்க இயலாத கொடுமையை செய்துள்ளார். தப்பி ஓடிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கிராமத்தில் உள்ள மற்றவர்களை சந்திக்கிறார் என்பதோடு அவர்களோடு தவறான உறவு வைத்துள்ளார் என்றும் நினைத்துள்ளார். அவ்வாறு செய்வது தவறு என்று மனைவியிடம் கூறியும் மனைவி கேட்கவில்லை என்று கூறியுள்ள அந்த டிரைவர், மனைவியின் பெண்ணுறுப்பை அலுமினிய வயர்களால் தைத்துள்ளார்.
தன் மனைவியை தாக்கி இக்கொடுஞ்செயலை செய்த அவர் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். வேதனையின் மத்தியிலும் அப்பெண் பக்கத்து கிராமத்தில் வசித்த தன் தாயாரை அழைத்துள்ளார். அப்பெண்ணின் தாயார் வந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, ஆம்புலன்ஸ் மூலம் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண் ராம்பூர் நகரிலுள்ள பெரிய மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அக்கொடிய மனுஷனை கைது செய்த போலீசார், காயத்தின் தன்மையை அறிந்து அவர் மேல் தக்க பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
You'r reading மனைவி மீது சந்தேகம்: கற்பனை செய்ய முடியாத கொடுமையை செய்த கணவன் Originally posted on The Subeditor Tamil
More Crime News