போன் பேசுவதை தவிர்த்த காதலிக்கு நிகழ்ந்த சோகம்…

by Ari, Apr 23, 2021, 14:59 PM IST

புதுச்சேரியில் தன்னுடன் பேசுவதை தவிர்த்த காதலியை தீர்த்துக்கட்டிய காதலன் மற்றும் அவரின் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருக்கனூரை அடுத்த சந்தைபுதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் ராஜஸ்ரீ. இவர் சேதராப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜஸ்ரீ, இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடியுள்ளனர். இதையடுத்து, அவர்கள், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பேட் சுடுகாட்டில் சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு, மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்டு சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாணவியின் செல்போனை ஆராய்ந்த போலீசார், அவருடன் கடைசியாக பேசிய பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜஸ்ரீயும், பிரதிசும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், கடந்த ஒரு வாரமாக இவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டு மாணவி, கல்லூரி நண்பருடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்த, ராஜஸ்ரீயை பொறையூர் பேட் பகுதிக்கு வரும்படி கூறி, ஆழ்நடமாட்டம் இல்லாத சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அங்குகிடந்த கட்டையால் மாணவியை, அந்த இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கிழே விழுந்த மாணவியை, அங்கு கிடந்த பீர் பாட்டலை உடைத்து வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து சடலத்தை தனது தம்பியின் உதவியுடன் சாக்கு மூட்டையில் கட்டி அங்கேயே போட்டுவிட்டு சென்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த பேலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You'r reading போன் பேசுவதை தவிர்த்த காதலிக்கு நிகழ்ந்த சோகம்… Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை