ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட 5 வயது சிறுமி பரிதாப பலி

May 4, 2018, 10:07 AM IST

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 வயது சிறுமி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கொடுங்கையூர், காவிரி நகரை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி லோகேஷ்வரி. இவர்களுக்கு 5 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தது. சிறுமி தன்ஷிகா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், தன்ஷிகாவிற்கு 5 வயதிற்கான தடுப்பூசி போடுவதற்காக அவரது பெற்றோர் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுமிக்கு தடுப்பூசி போடப்பட்டது. சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறுவதற்குள் சிறுமிக்கு திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறுமியை மீண்டும் மருத்துவர்களிடம் அழைத்து சென்றதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால, நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர்.

உடல்நிலையில் நன்றாக இருந்த சிறுமி தடுப்பூசி போட்ட பிறகு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததற்கு என்ற காரணம் என்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டதற்கு, மருத்துவர்கள் அலட்சியமான பதிலை தெரிவித்துள்ளனர்.

இதனால், சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறைதான் காரணம் என்று சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, மகளின் சடலத்தை வேறு ஒரு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் சிறுமி பலியான சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட 5 வயது சிறுமி பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை