செவிலி மீது பெண் ஒருவர் முட்டை வீசி தாக்குதல்

Jun 9, 2018, 16:10 PM IST

சென்னையில் செவிலி மீது பெண் ஒருவர் முட்டையை வீசி தாக்கிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றி வருகிறார்.

மருந்தகத்தில் அனிதா இருந்த போது அங்கு வந்த பெண் ஒருவர் சேலையில் மறைத்து வைத்திருந்த முட்டையை செவிலி மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் மருந்தகத்தில் இருந்த மாத்திரைகளை அந்த பெண் கீழே தள்ளிவிட்டுள்ளார். 

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளளது. சிசிடிவி காட்சியை காவல்நிலையத்தில் கொடுத்த செவிலி அனிதா, சம்பந்தப்பட்ட பெண் மீது புகார் கொடுத்துள்ளார்.

விசாரணையில், முட்டை வீசிய பெண்  எஸ்தர் என்பதும் அவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததற்கு காரணமாக இருந்த அனிதாவை முட்டை வீசி தாக்கியதும் தெரியவந்துள்ளது

இந்த புகார் குறித்து எஸ்தரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading செவிலி மீது பெண் ஒருவர் முட்டை வீசி தாக்குதல் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை