20 தொழிலாளர்களை விஷ வண்டு கதண்டு கடித்தது -பெரிய கோயிலில் பரபரப்பு

20 தொழிலாளர்களை கடித்த விஷ வண்டு!

by Radha, Jun 9, 2018, 14:49 PM IST

தஞ்சை பெரிய கோயில் கோபுர சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை ‘கதண்டு’ விஷ வண்டு கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Katandhu

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் ஒரு யாளி சிற்பம் உடைந்து சேதமாகி கீழே விழுந்தது. இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் கோபுரத்தை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது.

அங்கு சாரம் கட்டப்பட்டு அதில் தொழிலாளர்கள் ஏறிச்சென்று பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த கோபுரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டு வண்டுகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கடித்தது.

இந்த விஷ வண்டு கடியால் பாதிக்கப்பட்ட 20 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கதண்டு வண்டுகளை அழித்தனர். அதன் பின்னரே பக்தர்கள் பெரியகோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

You'r reading 20 தொழிலாளர்களை விஷ வண்டு கதண்டு கடித்தது -பெரிய கோயிலில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை