சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்: டாஸ்மாக் மது குடித்து 4 பேர் பலி

டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்பரம் காலனியை சேர்ந்தவர் கணேசன் (20). இவர் தனது நண்பர்களான லிங்கபுரம் காலனியை சேர்ந்த சிறுவன், வேலாயுத ரஸ்தா பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹீம் (22) மற்றும் முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த அய்யப்பன் (22), முருகன், அத்திகுளம் அந்தோனி என்கிற ஹரிஹரன், விஸ்வநத்தம் சரவணன் (23), கமராஜர்புரம் காலனியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் விடுமுறை நாட்களை கழிக்க குற்றாலம் செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

பின்னர், சிவகாசி பஜார் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு மது வங்கிக் கொண்டு மூச்சு முட்ட குடித்தனர்.

பின்னர், நேற்று காலை அனைவரும் வீடு திரும்பிய நிலையில் கணேசன், கார்த்திக், முகமது இப்ராஹ¨ம் ஆகியோர் மட்டும் அங்கேயே மயங்கிக் கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின உறவினர், நான்கு பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதேபோல், வீடு திரும்பிய மற்ற நான்கு பேரும் சிறிது நேரத்திலேயே மது குடித்துவிட்டு மயக்கம் அடைந்தனர். இவர்களை மீட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், விருதுநகர் மாவட்ட எஸ்ப ராஜராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இருப்பினும், மயக்க நிலையில் உள்ளவர்கள் கண் விழித்த பிறகே உண்மை நிலை தெரியவரும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds