சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்: டாஸ்மாக் மது குடித்து 4 பேர் பலி

by Isaivaani, Jun 25, 2018, 09:05 AM IST

டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்பரம் காலனியை சேர்ந்தவர் கணேசன் (20). இவர் தனது நண்பர்களான லிங்கபுரம் காலனியை சேர்ந்த சிறுவன், வேலாயுத ரஸ்தா பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹீம் (22) மற்றும் முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த அய்யப்பன் (22), முருகன், அத்திகுளம் அந்தோனி என்கிற ஹரிஹரன், விஸ்வநத்தம் சரவணன் (23), கமராஜர்புரம் காலனியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் விடுமுறை நாட்களை கழிக்க குற்றாலம் செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

பின்னர், சிவகாசி பஜார் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு மது வங்கிக் கொண்டு மூச்சு முட்ட குடித்தனர்.

பின்னர், நேற்று காலை அனைவரும் வீடு திரும்பிய நிலையில் கணேசன், கார்த்திக், முகமது இப்ராஹ¨ம் ஆகியோர் மட்டும் அங்கேயே மயங்கிக் கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின உறவினர், நான்கு பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதேபோல், வீடு திரும்பிய மற்ற நான்கு பேரும் சிறிது நேரத்திலேயே மது குடித்துவிட்டு மயக்கம் அடைந்தனர். இவர்களை மீட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், விருதுநகர் மாவட்ட எஸ்ப ராஜராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இருப்பினும், மயக்க நிலையில் உள்ளவர்கள் கண் விழித்த பிறகே உண்மை நிலை தெரியவரும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்: டாஸ்மாக் மது குடித்து 4 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை