நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் இ-மெயில்!

நிரவ் மோடிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை இ-மெயில் மூலம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Nirav Modi

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தார். இதற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருவாய் புலனாய்வுத்துறை கண்டறிந்தது. அதன்படி, ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், நிரவ் மோடி ஆஜராகவில்லை.

இதனால், அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது. இந்த வாரண்டை டிஆர்ஐ அதிகாரிகள் இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்நிலையில், நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவி கேட்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds