மாணவியின் தில்லுமுல்லு... ஆசிரியருக்கு தர்மஅடி
மாணவியின் பொய் புகார்... ஆசிரியர் தாக்கப்பட்டார்
காதலை கண்டித்த ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டுடோரியல் கல்லூரியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு படித்துவரும் 10-ஆம் வகுப்பு மாணவி, ஆசிரியர் சுந்தரம் தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 4 இளைஞர்கள் டுடோரியலுக்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம், மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மாணவி ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதை திசை திருப்புவதற்காக மாணவி, ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில், காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தன்னை காப்பாற்றிக் கொள்ள மாணவி ஆடிய தில்லுமுல்லு நாடகத்தால், ஓமலூர் டுடோரியல் கல்லூரியில் பதற்றம் நிலவியது.
You'r reading மாணவியின் தில்லுமுல்லு... ஆசிரியருக்கு தர்மஅடி Originally posted on The Subeditor Tamil
More Crime News