திறக்கப்பட்ட மதுபான கடையை இன்றே மூட வேண்டும் - உயர் நீதிமன்றம்

மக்களின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு, திறக்கப்பட்ட புதுச்சேரி நெடுங்காடு மதுபானக்கடையை இன்றே மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் இயங்கிவந்த சி.சி. & சி.சி.மதுபானக்கடையை காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

இதனை எதிர்த்து தேவமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நெடுங்காடு பகுதியில் உள்ள 35 குடும்பங்களில் மதுபழக்கத்திற்கு அடிமையாகி 20 பேர் உயிரிழந்ததால் அவர்கள் குடும்பத்தினர் ஆதரவற்றவர்களாக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொதுமக்களின் ஆட்சேபனை கடிதத்தை நிராகரித்த உடனேயே மதுபானக்கடையை அமைக்க அனுமதி வழங்கிய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்றும், திட்டமிட்ட மோசடி என்றும் தெரிவித்த நீதிபதிகள், அந்த கடையை இன்றே மூட உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து, புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சி.சி. & சி.சி. என்ற மதுபானக்கடை உரிமையாளர் பிரதாப் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27க்கு தள்ளிவைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds