ரத்த தானம் செய்ய வந்த இளைஞரின் கிட்னி திருட்டு

Jul 9, 2018, 20:27 PM IST

மதுரையில் ரத்த தானம் செய்ய அழைத்து சென்ற இளைஞரின் கிட்னியை திருடிவிட்டதாக அவரின் தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் முகமது பக்ருதீன் (19). இவரது உறவினர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தம் தேவைப்படுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், முகமதுவின் கிட்னி திருடப்பட்டதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு பிறகு முகமது பக்ரூதீனுக்கு திடீரென உடல் நலம் மோசமாகி உள்ளது. இதனால், முகமதுவை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முகமதுவை பரிசோதனை செய்த டாக்டர் ரத்தத்தில் கிருமி பரவி உள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் முகமதுவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது கிட்னி திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த முகமதுவின் தாயார், இதுகுறித்து மதுரை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

You'r reading ரத்த தானம் செய்ய வந்த இளைஞரின் கிட்னி திருட்டு Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை