வறுமை எதிரொலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை

Jul 30, 2018, 21:07 PM IST

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வறுமைக் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அர்சாண்டே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இரண்டு கைக்குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தூக்குப்போட்டு இறந்துக் கிடந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் மனமுடைந்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு கூறியதாவது: தகவல் அறிந்து வீட்டிற்குள் சென்று பார்த்ததில் இரண்டு கைக்குழந்தைகள் உள்பட 7 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, இவர்கள் மிகவும் வறுமையில் இருந்நதாகவும் அதனால் இவர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினார்.

You'r reading வறுமை எதிரொலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை