நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து... 8 பேர் பலி

கோவை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

Car accident

கோவை மாவட்டம் சுந்தராபுரம் 4 வழிச்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக கோவையை நோக்கி சொகுசு கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள், நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி மின்கம்பத்தில் முட்டி நின்றது.

கார் வேகமாக வருவதை பார்த்த பொதுமக்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மீண்டும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

Car accident

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதரித்த பொதுமக்கள், காருக்குள் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து போட்டு, சரமாரியாக தாக்கினர்.

பின்னர் ஓட்டுநர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மது போதையில் நிதானமின்றி காரை அதி வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஆடி கார், கோவை ரத்தினம் என்ற தனியார் கல்லூரி உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும் அதன் டிரைவர் ஜெகதீசன் என்பதும் தெரியவந்துள்ளது.

Car accident

ஜெகதீசனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சிலரும் தெரிவித்துள்ளனர். எனினும் இதன் முழு உண்மை நிலவரங்கள் போலீசாரின் விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும் என்கின்றனர்.

கார் ஓட்டுநர் ஜெகதீசன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :