ரஷ்ய நாட்டில் இருந்து மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வடக்கு சைபீரியாவில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதில் 3 விமானிகள் மற்றும் 15 பயணிகள் இருந்துள்ளனர்.
![helicopter 123.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/08/blobid1533444240910.jpg)
இந்த நிலையில், ஹெலிகாப்டர் மேலே எழும்பியவுடன் மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி உள்ளது. இச்சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 18 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்து இயல்பு நிலையிலான வானிலையிலேயே நடந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு ஹெலிகாப்டர் உடனடியாக பாதுகாப்புடன் தரை இறங்கியது. இந்த தகவலை ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.