பரங்கிமலை விபத்து... தண்டவாளத்தை மாற்றி அமைக்க முடிவு

மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

St. Thomas Mount

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில், கடந்த மாதம் 24ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக கடந்த 23ஆம் தேதியும் அதே இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பரங்கிமலை ரயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்திய பொதுமக்கள், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் செல்லும்போது இடையூறாக உள்ள தடுப்பு சுவர்களையும் அகற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 6ஆம் தேதி பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், 4-வது நடைமேடையில் இடையூறாக இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்துக்கு இடித்து அகற்றினர்.

ஆனால் 5 பேர் உயிரை பலி வாங்கி பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், அதற்கு பதிலாக நடைமேடையின் முன்புறம் தண்டவாளம் அருகே உள்ள சுவரை உடைத்து, 4-வது தண்டவாளத்தை சில அடி தூரம் வரை தள்ளி அமைத்தால் இதுபோல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

இதற்காக 4-வது தண்டவாளம் ஓரம் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு நடைமேடையில் கொட்டப்பட்டு உள்ளது. விரைவில் 4-வது தண்டவாளம் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds