தொடரும் தற்கொலை.. மெட்ரோ ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட பெண்

Sep 9, 2018, 09:03 AM IST

டெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று மாலை பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது. அப்போது, அங்கு நின்றிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென ஓடும் ரயிலின் முன் பாய்ந்தார்.

இந்த சம்பவத்தில் பெண் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு துடித்துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்பிஎப் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது குறித்தும், தற்கொலை செய்துக் கொண்டதற்கான குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, சத்தர்பூர் நிலையத்தின் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் நேற்று சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

You'r reading தொடரும் தற்கொலை.. மெட்ரோ ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட பெண் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை