நேபாளத்தில் பயங்கரம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி

Sep 9, 2018, 08:30 AM IST

நேபாளம், காத்மண்டு பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளம், சமாகான் என்ற பகுதியில் இருந்து நேற்று காலை 7.40 மணியளவில் தலைநகர் காத்மண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் நோயாளி ஒருவரும், விமானி ஒருவருடன் 5 பயணிகளும் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரித்ததில் ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களையட்டி அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேர் பலியாகினர். பெண் பயணி ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading நேபாளத்தில் பயங்கரம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை