ஒரே பெண்மேல் காதல் கொளுத்திக்கொண்ட பள்ளி மாணவர்கள்

by SAM ASIR, Oct 1, 2018, 13:04 PM IST

தெலங்கானா மாநிலத்தில், ஒரே பெண் மேல் காதல் கொண்ட இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஹைதராபாத்திலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜக்டியால் டவுண். இங்கு வசிப்பவர்கள் மகேந்தர் மற்றும் ரவி தேஜா. 16 வயது சிறுவர்களான இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். ஞாயிறன்று இரவு மது அருந்திய பின்னர் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.இதில் மகேந்தர் உயிரிழந்தார். ரவி தேஜா தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் பீர் பாட்டில்களையும் மொபைல் போன்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இருவரையும் தவிர வேறொருவரும் சம்பவ இடத்தில் இருந்தததாகவும் கூறப்படுகிறது. அதைக் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் குறித்து, இரு மாணவர்களுக்கும் ஏற்பட்ட காதல் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது கொலையா அல்லது தற்கொலை என்று உறுதிப்படுத்துவதற்காக, மொபைல் போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

You'r reading ஒரே பெண்மேல் காதல் கொளுத்திக்கொண்ட பள்ளி மாணவர்கள் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை