61 வயது மூதாட்டி கற்பழிப்பு: 21 வயது இளைஞன் கைது.

61-year-old woman raped: 21-year-old youth arrested

by Vijayarevathy N, Nov 8, 2018, 22:04 PM IST

தொடர்ந்து பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தொடரும் இவ்வன்கொடுமைக்கு எப்படிதான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என தெரியவில்லை. சட்டமும் தன் கடமையை செய்யும் என்று சொல்லி குற்றங்களை ஆதரித்து அதிகரித்துவிடுகிறது.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேல வடபாதியை சேர்ந்த 61 வயதான பாட்டியை கடந்த மாதம் முதல்காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பாட்டியின் உடல் அவ்வூர் இரயில்வே கேட் பகுதியில் கிடைத்துள்ளது.

61 வயதான பாட்டியை இரயில்வே கேட் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை கொலை செய்தது காவல்துறையினரின் அடுத்தக்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் கொலையாளி யார் என காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மூதாட்டியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக உறுதிக்கொண்டு 21 வயது இளைஞன் ஒருவர் கைதாகியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

You'r reading 61 வயது மூதாட்டி கற்பழிப்பு: 21 வயது இளைஞன் கைது. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை