மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 2 பேர் பலி: 50 பேர் படுகாயம்

by Isaivaani, Jan 16, 2018, 17:59 PM IST

சிவகங்கை: சிராவயல் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில், காளைகள் முட்டித் தள்ளியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சிராவயல் பகுதியில் இன்று மஞ்சுவிரட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிவகங்கை மட்டுமின்றி மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர்.

இந்த சமயத்தில், மைதானத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் துரத்திச் சென்றனர். அப்போது, சில காளைகள் பார்வையாளர்கள் பக்கம் சீறிப் பாய்ந்து ஓடியது. இதில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீது காளைகள் முட்டி தூக்கி வீசியன.

இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

You'r reading மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 2 பேர் பலி: 50 பேர் படுகாயம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை