`வீட்டுக்கு பெண் கேட்டு சென்றும் சம்மதிக்கவில்லை - ஒருதலை காதலால் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் வைத்து ஆசிரியை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள காயத்ரி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யாவை அதேபகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை ரம்யாவிடம் கூறியும் உள்ளார். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ரம்யா வீட்டுச் சென்ற ராஜசேகர், அங்கு அவரை பெண் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது வீட்டார் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரம்யா வகுப்பறைக்கு பாடம் எடுக்க சென்றுள்ளார். அங்கு வந்த ராஜசேகர் தன்னை திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் வகுப்பறையில் வைத்தே ரம்யாவை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். மாணவர்கள் முன்பு வகுப்பறையில் வைத்தே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீஸார் ஆசிரியையின் உடலை கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ராஜசேகரை தேடி வருகின்றனர். மேலும் அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds

READ MORE ABOUT :