நல்ல உறக்கத்திற்கு எதிரி தேநீர்.... ஏன்?

உணவே மருந்து

Sep 23, 2017, 23:12 PM IST

டலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நம் எல்லோருக்கும் ஆசை தான், நோயற்ற வாழ்க்கையை தான் நாம் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலும்‌ யாரும் அதற்காக முயற்ச்சிப்பது இல்லை,ஆராய்ந்து பார்த்தால் அதற்காக நாம் புதிதாக எதையும் செய்யத்தேவையில்லை, அது கடினமானதும் இல்லை,
உண்ணும் உணவின் மூலம் ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகளை கீழே பார்ப்போம். 

உறக்கத்திற்கு வழி வகுக்கும் உணவு

இரவில் சரியாக தூக்கம் வரவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் இழந்துவிடுகிறது, படுத்தவுடன் தூங்குவது தான் ஆரோக்கியமான உடலுக்கு முதல் படி. தேநீர், காபி பொருட்கள் தூக்கத்திற்கு மிகப்பெரிய எதிரி. தூக்கம் வர வேண்டும் என்றால் மூளைப் பகுதியில் செரடோனின், டோப்பாமின் என்ற சுரப்பிகள் சுரக்க வேண்டும். இவை சுரந்தால் மட்டுமே நமக்குத் தூக்கம் வரும். தேயிலையில் டேனின் என்ற நச்சுப்பொருளும், காபியில் காபின் என்ற நச்சுப்பொருளும் உள்ளன. இந்த இரண்டும் நம் உடலுக்குள்ளே செல்லும்பொழுது நேரடியாக மூளைப்பகுதிக்குச் சென்று தூக்கம் வருவதற்கானச்  சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றன. ஏற்கெனவே அவை சுரந்துவிட்டிருந்தால் சுரந்த திரவங்களைச் சிறுநீர் வழியாக வெளியே அனுப்பி விடுகின்றன.

ஒரு கோப்பைத் தேநீர் அல்லது காபி அருந்தினால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நமக்குத் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரக்காது.  நீங்கள் அருந்தும் பானத்தின் திடத்தை (strong) பொறுத்து இது மாறுகிறது. நமக்கு மாலை 6 மணிக்கு இலேசாகத் தூக்கம் வருவதுபோல இருக்கும். ஆனால், நாம் படுத்து தூங்க மாட்டோம். தூக்கம் வருவதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டால் மூளைக்குள் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரந்துவிட்டன என்அர்த்தம்.. அந்த சமயத்தில், ஒரு கப் தேநீர் அல்லது காபி குடித்துத் தூக்கத்தைத் துரத்திவிட்டு வேலை செய்கிறோம். பிறகு இரவு 9 மணிக்குப் படுத்து, ‘தூக்கம் வரவில்லையே’ எனக் கவலைப்படுகிறோம்.நீங்கள் அருந்தும் தேநீர் அல்லது காபியின் திடத்தைப் பொறுத்துப் பல மணி நேரத்திற்குத் தூக்கம் வராது. இதைப் புரிந்து கொள்ளாமல் தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொள்கிறோம். சரியான உறக்கம் இல்லாதது உடலில் பல நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். 

தேநீர் உறக்கத்தை கெடுக்கும்.

ஒரு நாளில் நீங்கள் 5 கப் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் கண்டிப்பாக உங்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனை இருக்கும். எனவே, தூக்கம் இல்லாமல் கவலைப்படுபவர்கள் தயவு செய்து தேநீர், காபியிலிருந்து வெளியே வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 

தேநீரும், காபியும் எந்த ஊரில் விளைகின்றனவோ அந்த ஊர் மக்கள் மட்டுமே சாப்பிட வேண்டியவை. உதாரணமாக, தேயிலைகள் குளிர் பிரதேசத்தில் மட்டும்தான் விளையும். குளிர் பிரதேசங்களில் நமக்குப் போதுமான அளவு உடற்சூடு இருக்காது. சோம்பலாக இருக்கும். எந்த வேலையும் செய்வதற்கு விருப்பம் இருக்காது. எனவே அப்பொழுது தேநீர் சாப்பிட்டால் அதிலுள்ள கசப்புச் சுவையும் மற்றுமுள்ள பொருட்களும் நம் உடலை ஊக்குவித்து, வேகமாக வேலையைச் செய்ய வைக்கும். எனவே, எந்த ஊரில் தேயிலை, காபிக்கொட்டை விளைகிறதோ அந்த ஊர் மக்கள் அவற்றைச் சாப்பிடுவதால் தவறு ஏதும் இல்லை. மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அதைச் சாப்பிடுவதால் அது உடலுக்கு நோயைத்தான் உண்டு செய்கிறது.

சீனாவில், உணவுக்குப் பின்,  குறைவான அளவில், பால் இல்லாத காபி அல்லது பால் இல்லாத தேநீர் அருந்துவார்கள். அது செரிமானத்துக்கு உதவும். நாமும், தேவைப்பட்டால் மிகவும் குறைவாக, கால் டம்ளர் தேநீர் அல்லது காபியை, பால் இல்லாமல், வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். இரண்டு வாய் சாப்பிட்டால் மருந்து; ஆனால், ஒரு டம்ளர் சாப்பிட்டால் விஷம்!

நம் ஊரில் அதிகமாக எந்த வகைக் காய்கறிகள், பழங்கள் விளைகின்றனவோ அவையே உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவாகும் . தென் இந்தியா ஒரு வெயில் பிரதேசம், இங்குள்ள மனிதர்களின் நிறமும் வெயிலின் தாக்கத்தால் கருப்பாக உள்ளது இயற்கையே, இங்கு வெயிலில் கஸ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பழைய அரிசி சாதத்தையே தண்ணீரில் கரைத்து விரும்பி சாப்பிடுவார்கள்,ஏனென்றால் இங்கு அரிசி அதிகமாக விளைகிறது,அதன் பெயரிலேயே R(ice)ஐஸ் இருக்கிறது, அதுபோலவே
அரிசி உணவில் குளிச்சி அடங்கியிருக்கிறது, இங்குள்ள மக்கள் அரிசி சாதத்தைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்

வட இந்தியாவில் வெயில் இருக்கும் அளவுக்கு குளிரும் அடிக்கும். அங்குள்ள மக்களுக்கு தேவை குளிர்ச்சி அல்ல சூடு. அங்கு கோதுமை அதிகமாக விளைகிறது, அதன் பெயரிலேயே w(heat) ஹீட் இருக்கிறது, அதைப்போலவே கோதுமை உணவில் சூடு அடங்கியிருக்கும்,அவர்கள் கோதுமை உணவை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

நம் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை ஆசைக்கு ஒரு முறை சாப்பிட்டுக் கொள்ளலாம்.அவற்றை நாம் தினமுமோ, அதிகமாகச் செலவு செய்தோ சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை வெயில் காலத்தில் மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடியது. இப்படித்தான் எல்லாத் தானியங்களும், பழங்களும், காய்கறிகளும் அந்தந்தப் பகுதிக்கேற்ப, ஒவ்வொரு பருவத்திற்கேற்ப விளைகின்றன. அதுபோல, மாம்பழ சீசன், நவாப்பழ சீசன், சப்போட்டா பழ சீசன், மாதுளம்பழ சீசன், பலாப்பழ சீசன், பப்பாளி பழ சீசன் என அந்தந்த பருவகால பழங்களை சாப்பிடுவதால் அந்தந்த பருவகாலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

இயற்கையுடன் இணைந்து அரோக்கியமான உடல் நலம் பெறுங்கள்!

 

You'r reading நல்ல உறக்கத்திற்கு எதிரி தேநீர்.... ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை