பாலகோட் தாக்குதலுக்குப் பின்னும் திருந்தாத பாகிஸ்தான்.... 513 முறை திருப்பி அடித்த இந்தியா

இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்திய விமானங்கள், 'ஆளில்லாத பகுதிகளில் குண்டு வீசிச் சென்றன. இதனால், சில மரங்கள் மட்டுமே வேரோடு சாய்ந்தன. மற்றபடி எந்தச் சேதமும் இல்லை. இந்தியா குறிப்பிடுவதுபோன்று, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஜெயிஷ் - இ - முகமது அமைப்பின் எந்த முகாமும் இல்லை' என்று மறுத்தது. எங்களின் மரங்களை இந்தியா சேதப்படுத்தியதாக ஐ.நா-விலும் புகார் அளித்தது பாகிஸ்தான். இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜக அரசு, வேண்டும் என்றே தேர்தல் யுக்தியாக விமானப்படை தாக்குதலை விளம்பரப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் இந்திய இராணுவத்தின் ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் நேற்று ரஜோரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து பேசினார். "பாலகோட் தாக்குதல் நடந்து முடிந்த இந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் தான். இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds