`நீ எப்படி எங்கள போட்டோ எடுக்கலாம் - இரண்டு இளைஞர்களை கொடூரமாக குத்திக்கொன்ற ஆட்டோ டிரைவர்!

போட்டோ எடுத்ததற்கு தாக்கியதால் இளைஞர்கள் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ், ராஜ் குமார். நண்பர்களான இவர்கள் பெயிண்டர் வேலைப் பார்த்துவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையேம் நேற்று இரவு நண்பர்கள் இருவரும் அந்தப் பகுதில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஆண்டாள் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகநாதன் என்பவர் இவர்களுக்கு தெரியும் என்பதால் இவர்களை மதுபோதையில் இருக்கும் போது தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் போதையில், ``நீ எப்படி எங்களை போட்டோ எடுக்கலாம்" எனக் கேட்டு ஜெகநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்

மூவருக்கும் இடையேயான தகராறு முற்றவே, ஜெகநாதனை இருவரும் அடித்து உதைத்து அவரது செல்போனை பறித்துள்ள்ளனர். இந்த சம்பவங்கள் முழுவதும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் அடிவாங்கியதை நினைத்து ஆத்திரமடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு உடனடியாக சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து திரும்பி டாஸ்மாக் கடை பகுதிக்கே வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷ், ராஜ்குமார் இருவரையும் அவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

பிரகாஷ், ராஜ்குமார்

போதையில் இருந்த இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க அவர்கள் இளைஞர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் கழித்து ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds

READ MORE ABOUT :