மனைவியின் மீது கோபம்கொண்ட காதல் கணவனின் வெறிச்செயல்

சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே மனைவியின் மீது உள்ள கோபத்தில் அவர் வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவனை போலிசார் கைது செய்தனர்.

வேளச்சேரி சாரதி நகர் 3வது தெருவைச் சேர்ந்த ஜெகநாத் என்பவரும், அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்த செல்வி என்பவரும் கடந்த பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

செல்வி, பரணி என பெயர் வைத்த நாயை நீண்ட நாட்களாக வளர்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு நாயை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாயை எங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடும்படி ஜெகநாத் கூறியுள்ளார்.

இதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததோடு, ஜெகநாத்துடன் சண்டையிட்டுள்ளார். நாய்க்காக தன்னுடன் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த ஜெகநாத் செல்வியை தாக்க முயன்றதால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜெகநாத் நாய் பரணியால் தான் செல்வி தன்னுடன் சண்டையிட்டதாக கருதிய அதனை கடுமையாகத் தாக்கி கொன்றுள்ளார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரில் ஜெகநாத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds