விவசாயியை விடுவிக்க லஞ்சம் கேட்ட அதிகாரி கைது! வேலூரில்

வேலூர் மாவட்டம் அமிர்தி வனப்பகுதிக்கு அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளாக, தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தைக் கொண்டு வருமானம் ஈட்டி வர்ந்துள்ளார். இந்த சூழலில் வயது மூப்பின் காரணமாக, ராமன் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவரது மகன் சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளாக விவசாய நிலத்தைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று, அமிர்தி வனத்துறை அதிகாரி ராஜா தெக்கூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராமனின் விவசாய நிலத்திற்கு சென்று, வனப்பகுதிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது வீட்டில் சிதம்பரம் இல்லை. பின்னர் ராமனை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து விடுவிக்க ரூ.1.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் வனத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார் அங்கு தனது தந்தையை விடுவிக்குமாறு கேட்டுள்ளார் ஆனால் பணம் கொடுக்காமல் விடுவிக்க மறுத்துள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய் அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய ராஜா ரூ.60,000க்கு பேரம் பேசியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் பணம் தரவில்லை எனில் போலி வழக்குகளை பதிவு செய்து சிதம்பரத்தை சிறை வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிதம்பரம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து டிஎஸ்பி சரவண குமார் தலைமையிலான குழுவினர் திட்டம் தீட்டி லஞ்சம் கொடுக்கும் போது அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 7ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds