தஞ்சையில் ரவுடி தலையை வெட்டிக்கொலை!

rowdy head cut murdered in Tanjore

by Manjula, Oct 25, 2018, 12:24 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாட்டுவெடிகுண்டு வீசி பட்டபகலில் ரவுடி வெட்டிக்கொலை. கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடியான தம்பாகார்த்தி சில மாதங்களுக்கு முன்பு ஏழு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நரியம்மபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்த பிரகாஷ் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினான். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், பிரகாஷ் மீது நாட்டுவெடிகுண்டு வீசியதோடு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலையை துண்டித்துப் படுகொலை செய்தனர். கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

You'r reading தஞ்சையில் ரவுடி தலையை வெட்டிக்கொலை! Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை