விருப்பமனு அளித்த திமுக வேட்பாளர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல்

Election: DMK candidates Interview at Chennai

Mar 9, 2019, 11:20 AM IST

தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் , சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட. கடந்த மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரை விருப்பமனு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அந்தந்த தொகுதி குறித்த முழு விவரங்கள், தொகுதியில் நிலவும் பிரச்சினைகள், என்னை பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யவீர்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி நேர்காணல் நடைபெறுவதாக, திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

You'r reading விருப்பமனு அளித்த திமுக வேட்பாளர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை