முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ் மகன் ஆசி!
Theni m.p. ravindranath meets chief minister
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, ஒரேயொரு தொகுதியில் மட்டும் வென்றது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், நீண்ட இழுபறிக்கு பின்பு வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை விட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு தனது தந்தை ஓ.பி.எஸ்.சுடன் வந்த ரவீந்திரநாத் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
You'r reading முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ் மகன் ஆசி! Originally posted on The Subeditor Tamil
More Politics News