அது மத்திய அரசு ஓட்டு மிஷின் ... இது மாநில அரசு எந்திரம்... கர்நாடக உள்ளாட்சி தேர்தல் பற்றி காங்.கருத்து

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அமோக வெற்றி பெற்று, பாஜக சரிவைச் சந்தித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் மக்களின் மனசு மாறிவிட்டது பாருங்கள் என்று எதையோ குத்திக் காட்டி, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்நாட மாநிலத்தில் உள்ள 28மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 மற்றும் 23 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாநிலத்தில் ஆளும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜகவோ 25 தொகுதிகளைக் கைப்பற்றியது.நாடு முழுவதும் வாக்கு எந்திரங்களில் தில்லு முல்லு என்று புகார் எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் தில்லு முல்லு நடத்தி பாஜக வென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.

இதற்கு தகுந்தாற்போல், மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் கடந்த மே 29-ந் தேதி கர்நாடகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 1221 இடங்களில் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 509, பாஜக 366, மதச்சார்பற்ற ஜனதா தளம் 174, சுயேச்சைகள் 172 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, ஒரு மாத இடைவெளியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்தது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.அதே வேளையில் மாநில அரசில் கூட்டணியாக இருக்கும் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்தத் தேர்தலில் தனித்தனியாக நின்று கணிசமான இடங்களை கைப்பற்றியதில் இரு கட்சிகளுக்குமே உற்சாகமாகியுள்ளது.

இந்த முடிவுகள் குறித்து காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிட்டதில், ஓட்டு எந்திரங்கள் பற்றிய சந்தேகத்தை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் நடந்த இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிட்டியுள்ளது.மக்களவைத் தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.ஒரு மாதத்தில் மக்களின் மனசு மாறி காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது சந்தோஷமாக உள்ளது என்று, வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டை இடித்துக் காட்டுவது போல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds