புதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்எல்ஏ, ஜான்குமார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமாவை எடுத்து பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதில் கடைசியாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இவர்கள் இருவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள உத்தரவில், காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜிநாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோரும் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
You'r reading புதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம் Originally posted on The Subeditor Tamil
More Politics News