புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிட வேண்டும் என என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் தலைவர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் எனப் புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங்க் தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்எல்ஏ, ஜான்குமார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமது ஆட்சியைக் கலைக்கச் சதி நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது.
போகிற போக்கைப் பார்த்தால் புதுச்சேரியில் 30 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
புதுச்சேரியில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகிவிட்டது.