புதுச்சேரி: தகதகக்கும் அரசியல் சூழலில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. 9 மணி நேரம் பெய்த 19 செ மீ மழையால் நகர பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதை பார்வையிட்ட புதிய ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் வடிகால் வசதிகள் சரியாக செய்யப்படவில்லை என்று கிரண்பேடி பாணியில் கமெண்ட் கொடுத்து நாராயணசாமியை கதிகலங்க வைத்திருக்கிறார்.
ஆனால் முதல்வர் நாராயணசாமியோ நாளைய ஆட்சி இருக்குமோ இல்லையோ என்று கவலைப்படாமல் இடுப்பளவு மழை நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளான ரெயின்போ நகர், மழைநீரில் சூழ்ந்து உள்ளது. இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீரில் முதல்வர் நாராயணசாமி நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கவர்னரின் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, கவர்னர் தமிழிசை புதுச்சேரி வந்து மூன்று நாட்கள் ஆகிறது. புதுச்சேரி பற்றி அவர்களுக்கு சரியாகத் தெரியாது. வடிகால் வசதி உள்ளது இருக்கிறது என்றார்.
You'r reading புதுச்சேரி: தகதகக்கும் அரசியல் சூழலில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு Originally posted on The Subeditor Tamil
More India News