மோடிக்கு அட்வைஸ் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா.. மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

by Sasitharan, Apr 19, 2021, 20:26 PM IST

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது உயர்ந்துகொண்டேதான் இருக்கிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ``கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விஷயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

இப்படி பேசிய 24 மணி நேரத்திற்குள் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதிசெய்யப்பட்டதைஅடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், ``டியர் மன்மோகன் ஜி விரைவில் நீங்கள் குணமடைய வேண்டுகிறேன். இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு உங்களது ஆலோசனைகள் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading மோடிக்கு அட்வைஸ் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா.. மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை