`Political Activist என்று எழுதுங்கள்... திருமாவளவன் சொன்ன ருசிகரம்!

by Sasitharan, Apr 22, 2021, 20:04 PM IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேர்தல் முடிந்தபின்பும் பரப்பாக அரசியல் செய்து வருகிறார். அரக்கோணம் இரட்டை கொலை விவகாரம், கட்சி மீட்டிங் என பம்பரமாக சுழன்று வருகிறார். இதற்கிடையே எவிடென்ஸ் கதிர் சமீபத்தில் திருமாவளவனை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நடந்தவை குறித்து பேசியிருக்கிறார்.

அதில், ``14 மாதம் கடந்து இன்று அண்ணன் திருமாவளவனை சந்தித்தேன். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், மனித உரிமைகள், சினிமா, வரலாறு என்று நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். ஒரு முயற்சி எடுத்து வருகிறேன். வாழ்த்துக்கள் கதிர் என்றார். கூட இருந்தவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டு கொண்டு இருந்தனர். நிறைய பகிர்ந்தும் கொண்டனர்

அப்போது ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினேன். அதில் முக்கிய பிரபலங்களின் பொறுப்பு மற்றும் பணிகள் குறித்து இருந்தது. அதில், பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதட்டுமா தலைவர் விடுதலை சிறுத்தைகள் என்று எழுதட்டுமா ? என்று கேட்டேன். கதிர் இரண்டுமே வேண்டாம். Political Activist (அரசியல் செயல்பாட்டாளர்) என்று எழுதுங்கள் என்றார்" எனக்கூறியுள்ளார்.

You'r reading `Political Activist என்று எழுதுங்கள்... திருமாவளவன் சொன்ன ருசிகரம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை