இந்தியா முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்

by Manjula, Sep 22, 2018, 16:05 PM IST

பிரதமரின் நரேந்திர மோடி யின் விருப்ப திட்டமான பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா எனப்படும்  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி நாளை ராஞ்சியில் இருந்து  தொடங்கி வைக்கிறார்.

 கடந்த மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் ஒரு ஏழை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ செலவை அரசே மேற்கொள்ளும் என்பதுதான். இந்தத் திட்டத்தை நாளை நாடு முழுவதும் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராஞ்சியில் இருந்து இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இவருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா கலந்து கொள்கிறார். பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொள்கின்றனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டதின் நோக்கம்:

  • ஒரு குடும்பத்துக்கு, ஓராண்டுக்கு மருத்துவ செலவு ரூ. 5 லட்சம் என்று இந்தத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
  • பிரீமியம் தொகைக்கான செலவினத்தை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுக் கொள்ளும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் இந்தத் திட்டத்திற்குள்74 கோடி பேர் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் படி, கிராமம் மற்றும் நகர்புறங்களில் இருந்து இந்தத் திட்டத்திற்கு பயனானாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தகுதி பெற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய, ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் யார் துணையும் இன்றி வசிக்கும் 16 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர் தகுதி பெறுகிறார்.
  • 16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர், உடல் ஊனமுற்ற, மற்றும் வேலை செய்யும் உடல் திறன் இல்லாத உறுப்பினர் கொண்ட குடும்பங்கள், பழங்குடியின மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள், நிலமற்றவர்கள், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தினர், பழங்குடியின குழுக்கள், சட்ட ரீதியாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் என ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைவர்.
  • நகர் புறங்களில் வசிப்பவர்களில் 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
  • நோயாளிகள் எவ்வித ரொக்கமும் செலுத்த வேண்டியதில்லை. காகித பரிவர்த்தனையும் இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும்.
  • சிகிச்சை செலவை கட்டுப்படுத்த சிகிச்சைக்கான மொத்த செலவும் (அரசு முன்னதாகவே நிர்ணயித்துள்ளபடி) ஒரே தொகுப்பாக்கப்படும். இந்த தொகுப்புக்குள் சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களும் அடங்கும்.
  • ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் சிகிச்சைக்கான கட்டணங்கள் மத்திய அரசு மருத்துவமனைகளை விட இந்தத் திட்டத்தில்20 சதவீதம் வரை குறைவாக இருக்கும்.

 

அரசு அறிவிக்கும் திட்டங்களின் வெற்றியும் தோல்வியும் மக்கள் அடையும் பலனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டதின் வெற்றி பற்றி பொருத்து இருந்து பார்ப்போம்.

You'r reading இந்தியா முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை