கோபத்துடன் காத்திருந்த பொன் ராதாகிருஷ்ணன்- கூட்டம் சேர்த்த அதிகாரிகள்

union minister pon radhakrishnan wait for public in Nagapattinam

by Manjula, Oct 27, 2018, 09:59 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆத்தனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார மையத்தை திறந்து வைத்து, சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பங்கேற்றார்.

சுமார் 11.30 மணியளவில், சுகாதார மையத்தை குத்துவிளக்கு ஏற்றி பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின் அங்கிருந்து 100 அடி தூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடைக்கு சென்று பார்த்த அவர், கூட்டம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விழாவை ஏற்பாடு செய்த அதிகாரி பொன் ராதாகிருஷ்ணன், மக்களுக்கான விழாவில் மக்கள் இல்லாமல் எப்படி என்று கோபத்தில் அதிகாரிகளை வசை பாடினார்.

அதோடு கிராம மக்களை அழைத்து வந்தால் தான் மேடை ஏறுவேன் என கண்டிப்பாக தெரிவித்துள்ளார். பின் ஒருவழியாக அதிகாரிகள் 50 கிராம மக்களை அழைத்து வர, சுமார் 45 நிமிடம் காத்திருந்த பின் மேடை ஏறினார் பொன் ராதா கிருஷ்ணன். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You'r reading கோபத்துடன் காத்திருந்த பொன் ராதாகிருஷ்ணன்- கூட்டம் சேர்த்த அதிகாரிகள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை