நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு ட்வீட்.. கிரண்பேடிக்கு கனிமொழி கடும் கண்டனம்

Kiranbedi must apologise for arrogant,racist comment, urges Kanimozhi

by Mathivanan, Feb 18, 2019, 17:15 PM IST

புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடியை திரும்ப பெறக் கோரி நாராயணசாமி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அவரை விமர்சிக்கும் வகையில் அவரது நிறத்தை முன்வைத்து காகத்துடன் ஒப்பிட்டு ஒரு ட்வீட் போட்டார் கிரண்பேடி.

இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, புதுவை முதல்வர் குறித்து, ஆளுனர் கிரண்பேடியின் ஆணவ கீச்சுக்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கிரண் பேடியின் சாயம் வெளுத்து ஆதிக்க வெறியின் முகம் வெளிப்பட்டுள்ளது என சாடியுள்ளார்.

You'r reading நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு ட்வீட்.. கிரண்பேடிக்கு கனிமொழி கடும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை