யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் தான் போட்டி - பல்டியடித்த தீபா

Loksabha election, j.dheepas comedy statements on contesting election

by Nagaraj, Mar 16, 2019, 14:30 PM IST

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்த ஜெ. தீபா இப்போது யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் போட்டியிடத் தயார் என்று திடீரென பல்டி அடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஆரம்பித்துள்ள ஜெயலலிதாவின் அன்ணன் மகள் ஜெ. தீபா அவ்வப்போது காமெடி செய்து வருகிறார். நேற்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்ட தீபா, மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும், போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை இன்றும் நாளையும் அனுப்பி வைக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தார். ஆகா, தீபாவும் தனித்து கெத்து காட்ட ஆரம்பித்து விட்டார். இனி தேர்தல் களத்தில் ஏராளமான காமெடிகளை பார்க்கலாம் என்ற ரீதியில் தீபாவின் அறிவிப்பு பரபரப்பானது.

ஆனால் இன்றோ, பெரும்பாலான கட்சிகளில் கூட்டணிக் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது. யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் அவர்களுடன் இணைந்து தேர்தல் களத்தில் குதிக்கத் தயார் என்று திடீரென பல்டி அடித்துள்ளார் தீபா. இதனை சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ள சிலர் என்னாங்க மேடம், உங்க கணவர் மாதவன் உடன் கூட்டணி வைக்க வேண்டியது தானே? அதுவும் சரிப்பட்டு வரலையா? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

You'r reading யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் தான் போட்டி - பல்டியடித்த தீபா Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை