மகனுக்காக களத்தில் குதித்த ஓபிஎஸ்... பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் உற்சாக வரவேற்பு

Loksabha election, OPS starts campaign in Theni

by Nagaraj, Mar 20, 2019, 14:44 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு நாயகன் என்ற பட்டம் பெற்றதால் சென்டிமெண்டாக தேனி தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை மகன் ரவீந்திரநாத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக பாலமேட்டில் உள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் ஓபிஎஸ் பிரச்சாரம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாலை, மரியாதை, பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

இதன் பின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ்.சையும், வேட்பாளர் ரவீந்திரநாத்தையும் பாலமேடு கிராம மக்கள் செண்டை மேளம் முழங்க ஏராளமான ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வரவேற்பளித்தனர். மகனை களத்தில் இறக்கிய வேகத்தில் விறுவிறு பிரச்சாரத்திலும் ஓ.பி.எஸ் ஈடுபட்டுள்ளதால் தேனி தொகுதி தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது.

You'r reading மகனுக்காக களத்தில் குதித்த ஓபிஎஸ்... பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் உற்சாக வரவேற்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை