காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து சுவாமி அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். இது அத்திவரதர் பெரு விழா என்று 48 நாட்கள் நடைபெறும், காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.


இந்தாண்டு அத்திவரதர் திருவிழா நாளை (ஜூலை 1) தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதரை எடுக்கும் பணி துவங்கி, அதிகாலை சுமார் 3 மணிக்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். பின், வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்திவரதருக்கு தைலக்காப்பு செய்யப்பட்டது. திருமஞ்சனம் செய்யப்பட்ட அத்திவரதரை ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாளை காலை 6 மணிக்கு அத்திவரதர் தரிசனம் தொடங்குகிறது. 48 நாட்களில் 30நாட்கள் அத்திவரதர் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார். இதையொட்டி காஞ்சிபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds