இடைத்தேர்தல் வெற்றியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. ஜெயக்குமார் பேட்டி..

Local body elections will be conducted soon, minister jeyakumar said

by எஸ். எம். கணபதி, Oct 24, 2019, 13:06 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் திரண்டு வந்து இனிப்பு வழங்கி, வெற்றியைக் கொண்டாடினர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாக அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைப் பார்க்கும் போது 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நன்றாக தெரிகிறது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.

You'r reading இடைத்தேர்தல் வெற்றியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. ஜெயக்குமார் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை