மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி.. காங்கிரஸ் கூட்டணி தோல்வி..

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி 167 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நாவிஸ் தலைமையில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 சட்சபைத் தொகுதிகளிலும் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும் பாஜக-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் நேரடியாக மோதின.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக-சிவசேனா கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. டைம்ஸ்நவ் வெளியிட்ட கணிப்பில் பாஜக அணி 230, காங்கிரஸ் அணி 48, மற்றவை 10 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டது. இந்தியா டுடே கணிப்பில் பாஜக அணி 166-194, காங்கிரஸ் அணி 72-90, மற்றவை 22-34 இடங்களை கைப்பற்றும் என்றும், நியூஸ் 18 கணிப்பில் பாஜக அணி 244, காங்கிரஸ் அணி 39, மற்றவை 5 என்றும் ஏபிபி சி ஓட்டர் கணிப்பில் பாஜக அணி 210, காங்கிரஸ் அணி 63, மற்றவை 15 என்றும், நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜக அணி 188-210, காங்கிரஸ் அணி 74-89, மற்றவை 6-10 என்றும் கூறப்பட்டது.

இதே போல், பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொங்கியது. முதல் சுற்றில் இருந்தே பாஜக, சிவசேனா வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். காலை 10 மணிக்கே பாஜக கூட்டணி 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.

பகல் 12 மணி நிலவரப்படி, பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்கள் உறுதியாகி விட்டது. பாஜக-சிவசேனா கூட்டணி 167 தொகுதிகளிலும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 95 தொகுதிகளிலும், மற்றவை 26 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.

எனவே, மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி கடந்த 2014 சட்டசபைத் தேர்தலில் 83 இடங்களே பிடித்தது. இம்முறை அதை விட 10 முதல் 15 தொகுதிகளை கூடுதலாக பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds