எண்ணூர் ரவுடி உட்பட 3 பேர் கோவில்பட்டியில் கைது..

திருவாரூரைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. இருந்தும் போலீசின் பிடியில் தனசேகரன் சிக்கவில்லை. இந்த நிலையில் இவர் மேலும் சிலருடன் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் எண்ணூர் தனசேகரன் மற்றும் அவருடன் இருந்த மதன்குமார், வழக்கறிஞர் அருள்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னையில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து சில போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தனசேகரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய பிரமுகரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாகவும் அதற்காகவே கோவில்பட்டிக்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் வந்த டிரைவர் அம்பேத் என்பவன் தப்பி ஓடி விட்டதால் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
5-killed-in-auto-accident-near-thoothukudi
தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
thoothukudi-road-blockades-in-several-places-demanding-drainage-of-stagnant-rain-water
தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்
thoothukudi-rape-case
மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
release-of-examination-schedule-for-10th-and-12th-class-within-10-days-minister-announced
இன்னும் 10 நாளில் 10, 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு: செங்கோட்டையன் தகவல்
vandu-murugan-style-challenge-dmk-personal-vehicles-damage
வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்
supreme-court-refused-reopening-of-sterlite-copper-plant-at-thoothukudi
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..
mysterious-ship-caught-near-thoothukudi-100-kg-of-heroin-seized
தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்
the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places
மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு
10-crore-worth-of-red-wood-confiscated-in-thoothukudi
தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
kandasashti-festival-started-this-morning-at-the-thiruchendur-subramania-swamy-temple
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
Tag Clouds

READ MORE ABOUT :