மெக்சிகோ: எண்ணெய் குழாய் வெடித்து 100 பேர் பலி
Mexico Pipeline blast: Death toll reaches 100
மெக்சிகோ நாட்டில் எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் வெடித்த விபத்தில் 100 பேர் பலியாகி உள்ளனர்.
மெக்சிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.
படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழாய்களில் இருந்து எண்ணெய் திருட முயற்சித்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கசிந்து கொண்டிருந்த எண்ணெய்யை பிடிப்பதற்கு 500க்கும் அதிகமானோர் அந்த இடத்தில் குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குழாய் வெடித்ததால் இப்பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
You'r reading மெக்சிகோ: எண்ணெய் குழாய் வெடித்து 100 பேர் பலி Originally posted on The Subeditor Tamil
More World News
READ MORE ABOUT :