நீதிமன்றத்தின் பிடியில் ராஜபக்‌சே! - ஊழல்களை விசாரிக்க உத்தரவு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது, அரசு கொள்முதல் நடவடிக்கைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேன, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை விசாரித்து தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவரான லலித் வீரதுங்கா மீதான ஊழல் புகாரை விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்கில் ராஜபக்சே-விடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தனக்கு எதிராக நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று ராஜபக்சே கூறியிருந்தார். இந்நிலையில், சிறிசேன வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.

இதனையடுத்து, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds