அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி ஜப்பானில் பயங்கரம்

13 feared dead in suspected fire at Japan film studio

by எஸ். எம். கணபதி, Jul 18, 2019, 13:33 PM IST

ஜப்பானில் ஒரு அனிமேஷன் தயாரிப்பு தியேட்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்தார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர்.

ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரத்தில் ஒரு மூன்று மாடிக் கட்டடத்தில் ஒரு அனிமேஷன் தியேட்டர் இயங்குகிறது. இங்கு காலையில் வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, ஒரு மர்மநபர் கையில் ஒரு திரவத்தைக் கொண்டு வந்தார். அதை அங்கு கொட்டி தீ வைத்தார். இதில் தீ மளமளவென பற்றி, கட்டடம் முழுவதும் பரவியது.

இந்த தீவைப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் தீக்காயங்களுடன் 36 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் 18 பேர் சிக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. தீயணைப்பு படையினர் அவர்களை மீட்க போராடி வருகின்றனர்.

கட்டடத்தில் சுமார் 70 பேர் வரை இருந்திருக்கலாம் என்றும், எல்லோரையும் மீட்ட பிறகுதான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்றும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தீ வைத்த மர்மநபரும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்திய பின்புதான் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.

மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி ; விடிய விடிய நடந்த மீட்புப் பணி

You'r reading அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி ஜப்பானில் பயங்கரம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை