75 ஆண்டுகாலம் இணை பிரியாத காதல் ஜோடி காட்டுத் தீயில் கருகிய சோகம்!

காதல் திருமணம் செய்துகொண்டு 75 ஆண்டுகாலமாக இணை பிரியாமல் வாழ்ந்து வந்த கலிஃபோர்னியாவை சேர்ந்த காதல் ஜோடி அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியாகி உள்ளது.

Oct 13, 2017, 12:55 PM IST

காதல் திருமணம் செய்துகொண்டு 75 ஆண்டுகாலமாக இணை பிரியாமல் வாழ்ந்து வந்த கலிஃபோர்னியாவை சேர்ந்த காதல் ஜோடி அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியாகி உள்ளது.

Charles Rippey and Sara

சார்லஸ் ரிப்பே என்பவர் சமீபத்தில் தான் நூறாவது பிறந்தநாளை கடந்துள்ளார். இவரது மனைவி சாரா. இவருக்கு வயது 99. இருவரும் 4ஆம் வகுப்பில் முதன் முறையாக சந்தித்துள்ளனர். அதன் பிறகு ஆறாம் வகுப்பு முதலே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்ததே கிடையாதாம்.

இது குறித்து அவரது மகன் மைக் ரிப்பே கூறுகையில், “அவர்கள் நீண்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இருவரும் தங்களது கடைசி நிமிடம் வரை மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவத்து வந்தார்கள். ஒருவேளை அவர்களில் ஒருவர் இறந்திருந்தாலும், அடுத்த கணமே மற்றொருவரும் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார். அதனால் தான் இறக்கும்போது கூட இருவரும் ஒன்றாக இறந்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Charles Rippey and Sara

கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் தங்களது 25ஆவது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். இந்நிலையில், கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 11 பேர் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட  வீடுகள் சேதமடைந்துள்ளன.

இங்கு ஏற்பட்ட தீப்புகை 60 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தெற்கு சான் பிரான்சிஸ்கோ வரை பரவியுள்ளது.

wildfire

இந்த தீ விபத்தில் தான் 75 ஆண்டுகாலம் இணை பிரியாது வாழ்ந்து வந்த அந்த வயதான காதல் ஜோடிகள் எரிந்து சாம்பலாகி உள்ளனர். மறைந்த சார்லஸ் ரிப்பே அவர்களுக்கு ஐந்து மகன்களும், அவர்கள் வழி பேரன், பேத்திகளும் உள்ளனர்.

You'r reading 75 ஆண்டுகாலம் இணை பிரியாத காதல் ஜோடி காட்டுத் தீயில் கருகிய சோகம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை